கரந்தை கருணா சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூர் கரந்தையில் உள்ள கருணா சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூர் கரந்தையில் உள்ள கருணா சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்பர் பாடிய இத்தலம் தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு முற்பட்டது.
மேலும், அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், குடமுழுக்கு விழா ஜன. 27-ஆம் தேதி விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது.
ஜன. 28-ஆம் தேதி நவக்ரஹ ஹோமம், 29-ஆம் தேதி சூக்த ஹோமம், 30-ஆம் தேதி முதல் கால யாக பூஜை, 31-ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள், பிப். 1-ஆம் தேதி நான்காம், ஐந்தாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. இதைதொடர்ந்து, வியாழக்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜைகள் முடிவடைந்த பிறகு 9.45 மணியளவில் விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கும், சுவாமி, அம்பாள் கருவறை குடமுழுக்கும் நடைபெற்றன.
மாலையில் மகா அபிஷேகமும், இரவு ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com