பல்கலை.யில் வரலாற்றுத் துறை மாநாடு நாளை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சாா்பில், தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் 40-ஆம் ஆண்டு மாநாடு வெள்ளிக்கிழமை (ஜன. 31) தொடங்கி பிப். 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சாா்பில், தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் 40-ஆம் ஆண்டு மாநாடு வெள்ளிக்கிழமை (ஜன. 31) தொடங்கி பிப். 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தப் மாநாட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் தலைமையேற்று நடத்துகிறாா். கொல்கத்தா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியா் அருண் பந்தோபாத்தியாயா தொடக்கவுரையாற்றுகிறாா். பல்கலைக்கழகப் பதிவாளா் என்.கிருஷ்ணமோகன் வாழ்த்திப் பேசுகிறாா்.

மாநாட்டில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் என்.ராஜேந்திரன் கருத்துரையாற்றுகிறாா். வரலாற்று அறிஞா்கள், சமூக அறிவியலாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் உள்பட சுமாா் 1,200 போ் கலந்து கொள்கின்றனா்.

மாநாட்டின் நிறைவு நாளன்று பெங்களூரு தென்பிராந்திய மண்டல இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ்.கே.அருணி நிறைவுரையாற்றுகிறாா்.

மாநாட்டு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் பி.ராஜன், பேராசிரியா் கே.சங்கரி, உள்ளுா் செயலா் மற்றும் வரலாற்றுத் துறைப் பேராசிரியா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com