இரண்டாவது ஆப்பிள்

First Published : 30 April 2012 12:55 AM IST

இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி; பக்.152; ரூ.75; விகடன் பிரசுரம், அண்ணாசாலை, சென்னை-2; )044- 4263 4283.

கம்ப்யூட்டர் உள்ளவரை தனது பெயரும் நிலைக்கும்வகையில் கம்ப்யூட்டரில் புதிய அறிமுகங்களைச் செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

1955-இல் பிறந்த அவருக்குக் கம்ப்யூட்டர் மேல் அதீத ஈடுபாடு ஏற்பட்டது. அதுவே அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்தது. எதிலுமே புதுமையை விரும்பியதால், ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கி சில ஆண்டுகளிலேயே அவருடைய 25-வது வயதிலேயே 265 மில்லியன் டாலருக்கு அதிபதியானார். ஆனாலும் அவர் துவங்கிய நிறுவனத்திலிருந்தே தூக்கி எறியப்பட்டார். தொடர் தோல்விகளுக்குப் பின் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் நுழைந்தார். முன்னர் பில் கேட்ஸýக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தோல்வியடைந்தபோதும், இப்போது அவருடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவருக்கு ஏறுமுகம்தான். இன்று சாமானியர்களும் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதற்கு காரணம் ஜாப்ஸ்தான்.

ஐமேக் கம்ப்யூட்டர், ஆப்பிள் ஸ்டோர்ஸ், ஐபாட், ஐட்யூன்ஸ், ஐபோன், ஐபேட் என அவரது தயாரிப்புகள் கொடிக் கட்டிப் பறந்தன. தனது பலவிதமான பலவீனங்கள், தோல்விகளை எல்லாம் வென்ற இந்த சாதனையாளர் யாரும் எதிர்பாராத வகையில் தனது 56-வது வயதில் (2011 அக்டோபர் 5) இயற்கை எய்திவிட்டார். சிறிய சோதனைகளுக்கே துவண்டுவிடுபவர்களுக்கு ஜாப்ஸின் வாழ்க்கை ஓர் அருமருந்து. இந்நூல் வெறும் வாழ்க்கை வரலாறு என்ற எல்லைக்குள் நின்றுவிடாமல், ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையினூடே இன்றைய தொழில், வணிகப் போட்டிகளில் நிலைத்து நிற்பதற்கான தந்திரங்கள், தோல்வியடைந்தாலும் கலங்காமல் வெல்லக் கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி, நிர்வாகத்தை நடத்திச் செல்வதற்கான சிறப்பான வழிமுறைகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள உதவுகிறது. புத்தகத்தை எடுத்தால் படித்து முடித்துதான் கீழே வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பான நாவல் போல அமைந்திருப்பது நூலின் சிறப்பு.

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.