அன்பெனும் தோட்டத்திலே

First Published : 26 March 2012 12:00 AM IST

அன்பெனும் தோட்டத்திலே - ஓஷோ; தமிழில்: வரலொட்டி ரெங்கசாமி; பக்.490; ரூ.250; கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044-2436 4243/ 2432 2177.

"அன்பு' இந்த மூன்று எழுத்துகளுக்குத்தான் எத்தனை வலிமை இருக்கிறது! அனைத்து மதங்களும் சமயங்களும் போதிக்கும் மந்திரம் அன்பு ஒன்றுதானே! ஆனால், மதங்களோ, சமயங்களோ நமக்குத் தேவையில்லை என்கிறார் தத்துவ ஞானி ஓஷோ. மதம் இந்த சமூகத்தைப் பீடித்த ஒரு நோய் எனவும், மதமே மனநோயின் மூலம் என்றும் கூறுகிறார். மெய்ப்பொருள் என்பது மூல உரு. அதை அடைய வேண்டுமானால், நீங்களும் மூல உருவாக இருக்க வேண்டும். போலிகளாக, வேஷதாரிகளாக, ஆஷாடபூதிகளாக இருந்தால் மெய்ப்பொருளை உணர முடியாது என்றும் கூறுகிறார்.

"அறிவு இல்லாதபோது அன்பு பிறக்கும். அறிவும் அன்பும் எதிர் துருவங்கள். அறிவு மிருந்திருக்கும் இடத்தில் அன்பு குறைந்துதான் இருக்கும். அன்பு மிகுந்தபோது அறிவைக் குறையச் செய்யும். அன்பு உங்களை ஞானியாக்கும். அறிவு ஒருபோதும் அன்பைக் கொடுக்காது. அன்பு என்னும் மலர் உங்கள் இதயத்தில் மலரும்போது அதன் வாசம் இறைவனின் திருவடி வரை செல்லும். அன்பு என்பது பரிபூரணத்துவத்துக்கு முகவரியிடப்பட்ட கடிதம். அன்பு ஒரு ரகசிய சாவி. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பூட்டுக்களையும் திறக்கக் கூடியது. எல்லாத் தடுப்புகளையும் தகர்க்கக் கூடியது' என்று நூல் முழுவதும் மனிதனைப் புனிதமாக்கும் அன்பு என்ற தாரக மந்திரத்தைப் பற்றிப் பத்துத் தலைப்புகளில் விரிவாக விளக்கியுள்ளார். சுருக்கமாக அவர் சொல்வது இதுதான் - ஒருவன் தன்னைத்தானே அன்பு செய்தால் - நேசித்தால்தான் அவன் இறைவனை அடையமுடியும் என்பதுதான். இன்றைய மாணவர்கள் நல்லொழுக்கம் பெற அவசியம் படிக்கவேண்டிய அன்பு நூல்.

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.