அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

First Published : 14 April 2012 04:53 PM IST

ஏற்கனவே தான் நடித்த படத்தின் குழுவினருக்கு தானே சமைத்து விருந்து வைத்து அசத்தினார் அஜீத். இப்போது மீண்டும் ஒரு விருந்து வைத்து படக்குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளார் அஜீத்.

பில்லா 2 படக்குழுவினருக்குத்தான் கிடைத்தது அந்த ஆனந்த அதிர்ச்சி.

கோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், விருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார் அஜீத்.

விருந்து முடிந்து வீட்டுக்குக் கிளம்பிப் போன படக்குழுவினருக்கு மறுநாள்தான் இந்த விஷயம் தெரிந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆடிப்போய்விட்டனராம் படக்குழுவினர்.

இது குறித்து இயக்குநர் ஆர்.டி. ராஜேசேகர் கூறுகையில், அஜீத்தின் இந்த செயலைப் பார்த்து நாங்கள் ஆடிப்போய்விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. படப்பிடிப்பிற்கு வந்ததும், ஒவ்வொருவருக்கும் சென்று வணக்கம் கூறிவிட்டுத்தான் தனது இடத்திற்கே செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தலன்னா சும்மாத்தானா!

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.