வில்லங்கச் சான்று கிடைப்பதில் தாமதம்
By
First Published : 09 April 2012 01:51 AM IST
கணினிமயமாக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் வில்லங்கச் சான்று கேட்டு விண்ணப்பித்தால் ஓரிரு நாள்களில் கிடைத்து விடுகிறது. ஆனால், சான்றுகளை கையால் எழுதித் தரும் அலுவலகங்களில் 20 நாள்களுக்கு மேலாகிறது.
இப்போது 90 சதவீத அலுவலகங்கள் கணினிமயமாகியுள்ளன. மற்ற அலுவலகங்களில் இன்னும் கையால் எழுதித் தரும் நடைமுறைதான் உள்ளது.
முன்பு பத்திரப் பதிவின் நகலைப் பெறுவதற்கு இதுபோன்று தாமதம் செய்யப்பட்டபோது, இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தினால் உடனடியாக நகல் தரப்படும் என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்தது. அதேபோன்று, வில்லங்கச் சான்றையும் கூடுதல் கட்டணம் பெற்றுக் கொண்டு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ரெய்ஸ் அகமத், டவுட்டன்.
இந்த பகுதியில் மேலும்
(Press Ctrl+g or click this
to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க