பெட்ரோல், டீசலுக்கு தமிழ்நாட்டில்தான் அதிக வரி: தே.மு.தி.க. குற்றச்சாட்டு
First Published : 30 Jul 2010 05:59:06 AM IST
Last Updated :
எரிபொருள் விலை, அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்கக் கோரி சென்னை தாம்பரத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.கவினர்.
தாம்பரம், ஜூலை 29: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசலுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் எஸ்.ஆஸ்டின் குற்றம் சாட்டினார்.÷சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆஸ்டின், இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசலுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் தமிழ்நாட்டில்தான் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது என்றார். ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் அனகை முருகேசன், நகரச் செயலர் வி.கண்ணையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.