Wednesday, September 08, 2010 1:40 PM IST
Click
சென்னை
லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் உதவியாளர் கைது குறித்து விசாரணை: ஜாங்கிட் உத்தரவு

First Published : 31 Jul 2010 01:23:07 AM IST

Last Updated : 31 Jul 2010 02:02:44 AM IST

சென்னை, ஜூலை 30: லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் உதவியாளர் ஏ. சங்கர், கடந்த 21-ம் தேதி மதுரவாயல் போலீஸôரால் கைது செய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள அம்பத்தூர் துணை கமிஷனருக்கு புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர். ஜாங்கிட் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

இது குறித்த விவரம்: கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும் தொலைபேசியில் பேசிய உரையாடல் நாளிதழ் ஒன்றில் வெளியானது.

இது தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை குழுவின் அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த ஏ. சங்கர் சிபிசிஐடி போலீஸôரால் 2008 ஜூலையில் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர் அடுத்த சில மாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

எனினும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவர் மீதான துறை சார்ந்த விசாரணையும் நிலுவையில் உள்ளது.

கடந்த 21-ம் தேதி காலையில் மதுரவாயலில் மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்த சுதாகர் என்பவரை தாக்கியதாக மதுரவாயல் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் 23-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தனியார் இணையதளம் ஒன்றில் குறிப்பிட்ட சில உயரதிகாரிகள் தொடர்பாக வெளியான தகவல்களால் ஏற்பட்ட சர்ச்சையின் பின்னணியிலேயே சங்கர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அப்போது பரவலாக கூறப்பட்டது.

புறநகர் போலீஸில் புகார்: இந்த நிலையில் ஏ. சங்கர், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

கடந்த 21-ம் தேதி காலை 8.30 மணி அளவில் தன்னை வீட்டிலிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீஸôர், 9 மணிக்கு சாலையில் சி. சுதாகர் என்பவருடன் பிரச்னை ஏற்பட்டதாக 10 மணிக்கு வழக்குப் பதிவு செய்து 12 மணிக்கு கைது செய்ததாக நீதிமன்றத்தில் ஆவணங்களை அளித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் மதுரவாயல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப் இன்ஸ்பெக்டர் சி.ஜே. ஸ்டாலின் ஆகியோர் பல்வேறு விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில், சுதாகர் என்பவர் அளித்ததாக கூறப்படும் புகாரின் உண்மைத் தன்மை குறித்தும் விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் சங்கர் குறிப்பிட்டிருந்தார்.

ஜாங்கிட் உத்தரவு: சங்கர் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட கமிஷனர் ஜாங்கிட், இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஜான் செல்லையாவுக்கு உத்தரவிட்டார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்