Friday, September 10, 2010 2:46 AM IST
Click
சென்னை
தியாகராய நகரில் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்

First Published : 31 Jul 2010 01:28:43 AM IST


சென்னை, ஜூலை 30: சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் 600 கிலோ சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மண்டலம்-8, உதவி சுகாதார அலுவலர் தலைமையில் சுகாதார ஊழியர்கள் தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் மேற்கொண்ட ஆய்வில் வடை, பஜ்ஜி, போண்டா,  பாதாம் பால், சிப்ஸ், சுண்டல், காலிபிளவர் பகோடா, ஐஸ்கிரீம் போன்ற 600 கிலோ எடையுள்ள தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தரமற்ற 10 மூட்டை தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆய்வின்போது 25 கிரேடு தரமற்ற பாதாம்பால் மற்றும் உணவுப் பொருள்கள் வைப்பதற்காக வைக்கப்பட்ட சுகாதாரமற்ற பாத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து தரமற்ற உணவுப் பொருள்களும் அழிக்கப்பட்டன. பொதுமக்கள் தரமற்ற உணவுப் பொருள்களை வாங்க வேண்டாம் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்