Friday, September 03, 2010 1:44 PM IST
Click
சென்னை
சிறார் நல கருத்தரங்கு

First Published : 17 Feb 2010 12:32:37 AM IST


புதுச்சேரி, பிப். 16: சிறார்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தீங்கிற்கு எதிரான கருத்தரங்கு புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

÷புதுச்சேரி ஹோப் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவியும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய ஒருங்கிணைப்பாளருமான கமலினி பங்கேற்று பேசியது:÷குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க,  குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்கள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆணையத்தின் மூலம் இத்தகைய பயிற்சி வகுப்புகள்  விரைவில் புதுச்சேரி முழுவதும் நடத்தப்படும் என்றார்.÷பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை கமலினி வழங்கினார். துளிர் நிறுவனத்தைச் சேர்ந்த நான்சி, ஹோப் நிறுவன இயக்குநர் ஜோசப் விக்டர் ராஜ், நிர்வாகி மேரி விக்டோரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்