மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி
First Published : 30 Jul 2010 01:51:55 PM IST
Last Updated :
திருத்தணி, ஜூலை, 29: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணி திருத்தணியில் புதன்கிழமை நடைபெற்றது.÷சித்தூர் சாலை, ம.பொ.சி. சாலை, அரக்கோணம் சாலை வழியாக ஆலமரம் தெரு ஊராட்சி நடுநிலைப் பள்ளியை பேரணி சென்றடைந்தது.÷திருத்தணி சிஆர்சி ஒருங்கிணைப்பாளர் பி.எஸ். அருள் வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பி.சசிகலா தலைமை வகித்தார். உதவி தொடக்கல்வி அலுவலர் ஏ.அழகுமீனா முன்னிலை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் பூபதி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஜி.வெங்கடேசன், சஞ்சீவி உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினர். ஆசிரியர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.