Wednesday, September 08, 2010 1:40 PM IST
Click
சென்னை
நெடிமோழியனூரில் மீண்டும் மர்ம தீ

First Published : 30 Jul 2010 01:53:57 PM IST


விழுப்புரம், ஜூலை 29: திண்டிவனம் அருகே உள்ள நெடிமோழியனூரில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டதால் அந்த கிராமத்தில் பதற்றம் நிலவியது. கடந்த 22-ம் தேதி நடந்த தீ விபத்தில் இரு பெண்கள் பாதிக்கப்பட்டு, அதில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றொருபெண் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

÷இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அது முதல் அந்த கிராமத்தில் தீ விபத்து ஏற்படவில்லை. அமைதியாக இருந்து வந்த கிராமத்தில் புதன்கிழமை மீண்டும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

÷அந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மற்றும் அவரின் மகன் சக்திவேல், மருமகள் தீபா மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் புதன்கிழமை இரவு வீட்டில் படுத்திருந்தனர்.

÷அப்போது அதிகாலை சுமார் அதிகாலை 4.30 மணிக்கு குழந்தை அழுததாம். அமைதிப்படுத்துவதற்காக தீபா குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றார். அங்கு குழந்தையும், தாயும் படுத்திருந்த கட்டிலில் இருந்த மெத்தையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

÷உடனே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி தீயை அணைத்துள்ளனர். இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்த கிராமத்தில் மீண்டும் மர்மத் தீ பரவத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்