Friday, September 10, 2010 3:18 AM IST
Click
சென்னை
ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு புதிய நிபந்தனை

First Published : 30 Jul 2010 01:54:52 PM IST


உளுந்தூர்பேட்டை, ஜூலை 29: விபத்துகளை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து ஆய்வு செய்வதற்கு வட்டாரப்  போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

÷அதன்படி விழுப்புரம் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் உளுந்தூர்பேட்டை பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

÷விபத்தை குறைப்பதற்கு ஒவ்வொரு பயிற்சி பள்ளியிலும் வகுப்பறை, செயல் விளக்க அறை, தீ அணைப்பான் கருவி, போக்குவரத்து சிக்னல் அறை, ஓய்வு அறை, அலுவலக அறை ஆகிய வசதிகளுடன் 1000 சதுரடி அளவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி அலுவலகம் அமைந்திருக்கின்றனவா என ஆய்வு செய்தார்.

÷மேற்கண்ட வசதிகளுடன் அமைந்த உளுந்தூர்பேட்டை பாலாஜி ஓட்டுநர் பயிற்சி பள்ளியை பார்வையிட்டு பயிற்சி பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

÷உளுந்தூர்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் துரை, பயிற்சி பள்ளி நிர்வாகி ராஜராஜன், புகை பரிசோதனை நிலைய ஆய்வர் வ.சு.சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்