Friday, September 10, 2010 3:02 AM IST
Click
தற்போதைய செய்திகள்
இலங்கையில் டி.வி. அலுவலகம் மீது தாக்குதல்

First Published : 30 Jul 2010 03:43:45 PM IST


கொழும்பு, ஜூலை 30- இலங்கையில் சியதா டி.வி. அலுவலகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

வாய்ஸ் ஆஃப் ஏசியா நெட்வொர்க் என்னும் ஊடக நிறுவனம் சியதா டி.வி., மற்றும் 3 எப்.எம். ரேடியோக்களை நடத்தி வருகிறது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில், கொழும்பில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் துப்பாக்கிகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளுடன் வந்து தாக்குதல் நடத்தினர். இதில், டி.வி. அலுவலகம் பலத்த சேதமடைந்தது. இதையடுத்து, ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. எனினும், எப்எம் ரேடியோக்களின் ஒலிபரப்பு மட்டும் தொடர்ந்து செயல்பட்டது.

அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக இந்த ஊடக நிறுவனம் செயல்பட்டதால் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இத்தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு காவல்துறை தலைவருக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்