புதுதில்லி, ஜூலை 30- இந்தியாவிடம் கோஹினூர் வைரத்தை திருப்பித் தர இயலாது என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"இத்தகைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், பிரிட்டிஷ் அருங்காட்சியகங்கள் காலியாகத் தான் காட்சியளிக்கும்" என்றும் கேமரன் குறிப்பிட்டார்.