
மும்மொழிப் பாடம் கட்டாயம்: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு எதிராக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் மனு
வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பில் மும்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய கொள்கைக்கு எதிராக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் ஃபௌசியா கான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.











