இலங்கை செல்லும் குழுவில் திமுக சார்பில் யாரும் இடம்பெறவில்லை: கருணாநிதி
By
First Published : 15 April 2012 02:00 PM IST
சென்னை, ஏப்.15: இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான மறுவாழ்வு கிடைப்பதை நேரில் பார்வையிட்டு உறுதி செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்லும் இந்தியக் குழுவில் திமுக சார்பி்ல் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: நாடாளுமன்றக் குழு இலங்கை செல்லும் போது திட்டமிட்டபடி திமுக உறுப்பினரும் செல்கிறாரா?
கருணாநிதி: திட்டமிட்டபடி என்று கேள்விகேட்பதே தவறு. அப்படி திமுக திட்டமிடவில்லை.
கேள்வி: பயணம் மேற்கொண்டால் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு முன்னேறும், எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
கருணாநிதி: எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதற்கு பழைய கால உதாரணங்கள் இருக்கின்றன. எனவே அந்தப் பயணத்தை திமுக சார்பில் யாரும் மேற்கொள்ளவில்லை.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம்:ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்
- ஏழுமலையான் முடி காணிக்கை வருமானம்: 107 கோடி
- கொலை வழக்கு: மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
- ராமேஸ்வரம் கடலில் மூழ்கி 2 பேர் பலி
- இலங்கையில் இருந்து 26 மீனவர்களும் காரைக்கால் திரும்பினர்
- மும்பை பங்குச் சந்தை சரிவுடன் துவக்கம்
கருத்தை பதிவு செய்க