கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை : ராமதாஸ் வலியுறுத்தல்
By
First Published : 15 April 2012 12:52 PM IST
சென்னை, ஏப்.15: கல்விபெறும் உரிமைச் சட்டத்தை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு கொண்டுவந்த கல்வி உரிமைச்சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் பள்ளிகளில் 25% இடங்களை அந்தந்த பகுதிகளில் வாழும் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் வரும் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே முடிவடைந்துவிட்டது. இதை காரணம் காட்டி ஏழை மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவதை தவிர்க்க தனியார் பள்ளிகள் முயற்சிசெய்யும். எனவே தனியார் பள்ளிகளில் இதுவரை செய்யப்பட்டுள்ள மாணவர் சேர்க்கைகளை ரத்து செய்து கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்கை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
இதைச் செய்ய மறுக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்வதுடன் அவற்றை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த பகுதியில் மேலும்
பரிந்துரைகள்
- கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன், ஸ்ருதிஹாசன் நெருக்கம்?
- பிரதமர் மன்மோகன் பற்றிய அடுத்த சர்ச்சை கிளம்பிவிட்டது
- கைக்குட்டை மூலம் சைகை! ஐபிஎல் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் விநோதம்!
- 32 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் ஜோடி
- ஐபிஎல்.லில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைது
- மரியான் படத்துக்காக சிறுத்தையுடன் நடித்த தனுஷ்!
கருத்தை பதிவு செய்க