ராஜிவ் கொலையாளிகளின் வழக்கு தமிழகத்திலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்

First Published : 01 May 2012 11:29 AM IST

புதுதில்லி, மே.1:  தூக்குத் தண்டனையை எதிர்த்து ராஜிவ் கொலைக்குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

முன்னதாக இவர்களின் கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதையடுத்து 3 பேரையும் செப்டம்பர் மாதம் தூக்கிலிட முடிவுசெய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் 3 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்றம் 3 பேரின் தூக்குத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

தங்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் நீண்டகாலம் எடுத்துக் கொண்டார் என்பதால் தங்களின் தூக்குத் தண்டனையை குறைக்கும்படி 3 பேரும் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே சென்னை இந்த வழக்கு விசாரணை நடைபெற உகந்த இடமல்ல என்று காங்கிரஸைச் சேர்ந்த வெங்கட் என்பவர் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரினார்.

இந்த நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி விசாரணை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.