''எம்.பி.க்கள் குழுவில் தமிழக கட்சிகள் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது''

First Published : 18 April 2012 01:46 AM IST

சென்னை, ஏப். 17: இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவில் தமிழக கட்சிகள் இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாக பாஜக அகில இந்தியச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.

 இது குறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:

 இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் நிலை குறித்து ஆராய்வதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ளது.

 இக் குழுவில் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக போன்ற கட்சிகள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. இக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி குழுவில் இடம்பெறச் செய்ய மத்திய அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் பயணத் திட்டத்தையும் உருவாக்கவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது.

 ஆனாலும், சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழு மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணமும், நீதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து நிலைகளிலும் சம உரிமையும், தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரமும் வழங்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலை. நீண்டகாலமாக இதனை வலியுறுத்தி வருகிறோம்.

 புதிய அத்தியாயம் தொடங்கும்: ஏப்ரல் 28, 29 தேதிகளில் தாமரை சங்கமம் என்ற பெயரில் மதுரையில் பாஜக 5-வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. பாஜக தலைவர் நிதின் கட்கரி, அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், கர்நாடக முதல்வர் சதானந்த கௌடா உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

 இந்த மாநாடு முடிந்ததும் தமிழகத்தில் பாஜகவின் புதிய அத்தியாயம் தொடங்கும் என்றார்.

 தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியது:

 காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். இதனை கேட்டுப் பெறுவது தமிழகத்தின் உரிமை. இதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாஜக துணை நிற்கும். தேவைப்பட்டால் இதற்காக பாஜக போராடவும் தயாராக உள்ளது என்றார்.

 பேட்டியின்போது பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு, மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், அகில இந்திய வர்த்தக அணி பொதுச்செயலாளர் எஸ்.ஆர். சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.