இலங்கை வடக்குப் பகுதியில் தேர்தல்: ராஜபட்ச பேச்சில் உள்நோக்கம்

First Published : 12 July 2012 02:05 AM IST

சென்னை, ஜூலை 11: இலங்கை வடக்குப் பகுதியில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக அந்த நாட்டு அதிபர் ராஜபட்ச கூறியுள்ள கருத்தில் உள்நோக்கம் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை வடக்குப் பகுதியில் 2013 செப்டம்பரில் தேர்தல் நடத்தப் போவதாக இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியிருக்கிறார். ஆனால் தேர்தல் நடைமுறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதை எதிர்த்த மற்ற விடுதலைப் புலிகள், பூசா முகாமுக்கு மாற்றப்பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறையிலேயே அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதை மறுத்த சிறை அதிகாரிகள், 3 விடுதலைப் புலிகளை ஒரே அறையில் தள்ளிப் பூட்டிவிட்டனர். இதனால் வவுனியா சிறையில் கடந்த மாதம் 30-ம் தேதி கலவரம் ஏற்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து வவுனியா சிறையில் இருந்த 201 கைதிகளும் அனுராதபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் தமிழ்க் கைதிகள் பலர் காயமடைந்துள்ளதோடு, கணேசன் நிமலரூபன் என்பவர் இறந்துவிட்டார்.

ஆனால் அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிமலரூபன் உடலை அவர் பெற்றோர் வவுனியாவில் தகனம் செய்யவேண்டும் என்று கோரியுள்ளனர். இதற்கு மறுத்து கொழும்புக்கு அருகே உள்ள சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது மகாபாதகம் அல்லவா? இதற்கெல்லாம் விடிவு காண வேண்டும் என்பதற்காகத்தான் டெசோ மாநாடு நடைபெறுகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.