கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் சொந்தம் கல்விச்சோலை டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் 8-ஆம் ஆண்டு விழா கும்மிடிப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கும்மிடிப்பூண்டி ஆர்.எம்.பி ஸ்ரீமஹாலில் நடைபெற உள்ள இந்த விழாவில், பயிற்சி முடித்து அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்துள்ளவர்களுக்கு பாராட்டு விழாவும், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், தமிழக வேளாண்துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் ஏ.எம்.காசி விஸ்வநாதன், திருவள்ளூர் சார் - ஆட்சியர் டி.ரத்னா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கல்பனா தத் ஆகியோர் பங்கேற்று, சிறப்புரையாற்ற உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை சொந்தம் கல்விச்சோலை இயக்குநர் இராச.முகுந்தன், நிறுவனர் எம்.சேகர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.