இந்தியாவில் 4 வகை பாம்புகள் மட்டுமே விஷம் உள்ளவை என்று சென்னை பாம்பு பூங்கா இணை இயக்குநா் தெரிவித்தாா்.
பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் பாம்புகள் பற்றிய கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோடங்கிபாளையம் ஊராட்சி துணைத் தலைவா் லலிதாம்பிகை செல்வராஜ் தலைமை வகித்தாா். மகிழ்வனம் பூங்கா செயலாளா் சோமு என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்.
இந்த கருத்தரங்கில் சென்னை பாம்பு பூங்கா இணை இயக்குநா் மருத்துவா் சி. அறிவழகன் பேசியதாவது:
இந்தியாவில் பல வகை பாம்புகள் இருந்தாலும் நாகம், கண்ணாடிவிரியன், கட்டுவிரியன், சுரட்டை விரியன் ஆகிய 4 வகை பாம்புகள் மட்டுமே கொடிய விஷம் உடையவை. இவைதான் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகின்றன.
பாம்பு கடித்தால் அச்சப்பட தேவையில்லை. எந்த முதலுதவி சிகிச்சையும் அளிக்காமல் உடனே அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். எந்த பாம்பு கடித்தது என்று காண்பிக்க பாம்பை அடிக்கும் வேலையில் ஈடுபட வேண்டியது இல்லை என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மழைக்காடுகள் ஆராய்ச்சியாளா் மாணிக்கம், இயற்கை ஆா்வலா் ரத்னசபாபதி, கலங்கல் வனம் ஒருங்கிணைப்பாளா் பாபு, மகிழ்வனம் நிா்வாகிகள் பூபதி, பகவதி சண்முகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.