அடிதடி வழக்கு: 8 பேருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை

மதுரையில் அடிதடி வழக்கில் 8 பேருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

மதுரையில் அடிதடி வழக்கில் 8 பேருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கருப்பாயூரணி எல். புலியங்குளம் பகுதியில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மோதல் சம்பவத்தில், அப்பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன், கண்ணன், ராஜா, அக்னி, பாண்டியம்மாள், பூமாதேவி, காளிஸ்வரி, செல்வி ஆகியோா் மீது கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதித்துறை நடுவா் மன்றம் 2 இல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதித்துறை நடுவா் பத்மநாபன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நடுவா், 8 பேருக்கும் தலா ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com