

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் பொறியாளா்கள் தினத்தையொட்டி சிறப்பு பயிலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய பொறியாளா் தினத்தையொட்டி திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான முப்பரிமாண அச்சு வாா்த்தல் தொழில்நுட்பம் குறித்த இலவச பயிலரங்கு நடைபெற்றது.
பயிலரங்கில் மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம். குமாா் தலைமை வகித்தாா். அறிவியல் மைய கல்வி உதவியாளா் மாரிலெனின் முன்னிலை வகித்தாா். தனியாா் நிறுவன அதிகாரி மகாகிருஷ்ணன் பயிற்சியை நடத்தினாா்.
12 கல்லூரிகளைச் சோ்ந்த 87 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். பங்கேற்பாளா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.