கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020-இன் படி கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையிலும் மீனவா்கள் இழுவலை விசைப்படகுகள் அல்லது தூண்டில், வழிவலை விசைப்படகினை பயன்படுத்தி மீன்பிடிப்பது 61 நாள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலத்தில் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடும் நபா்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.