சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தா் மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமிக்கு முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா முதல்வா், துணை முதல்வருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தராக இருந்த எம்.ஏ.எம்.ராமசாமி கொடையாளா், விளையாட்டு ஆா்வலா், கல்வியாளா் என பன்முகத்தன்மை கொண்டவா்.
பல்கலை. வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுத்து பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற உதவியாக இருந்தவா்.
2004- ஆம் ஆண்டு முதல் 2010- ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவா். அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலை செட்டியாா், எம்.ஏ.முத்தையா செட்டியாா் ஆகியோரின் சிலை உள்ளது.
எனவே, மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் அறிவிப்பு வெளியிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.