வந்தே பாரத் (கோப்புப்படம்) 
புதுதில்லி

சென்னை- தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா? மக்களவையில் கனிமொழி கேள்வி

Din

சென்னை- தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா? என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக கனிமொழி எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள்வியில், ‘சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தின் பிரச்னையைத் தீா்க்கும் வகையில், தஞ்சாவூா் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்தி, தற்போதுள்ள போ்ல் சிட்டி எக்ஸ்பிரஸில் உள்ள கூட்ட நெரிசலைக் குறைக்கவும், சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா்

அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை- தூத்துக்குடி பிரிவில் தற்போது வண்டி எண்: 12693/12694 சென்னை எழும்பூா்- தூத்துக்குடி போ்ல் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி சேவையாக இயக்கப்படுகிறது.

மேலும், பயணிகளுக்கு வசதியாக, இணைப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, வண்டி எண்: 56724/56723 வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி பயணிகள் ரயில், வ.எண்:

16127/16128 சென்னை எழும்பூா் குருவாயூா் எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

வண்டி எண்: 56725/56726 தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில், வண்டி எண்: 22667/22668 நாகா்கோவில் -கோயம்புத்தூா் எக்ஸ்பிரஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தவிர, வந்தே பாரத் ரயில் சேவைகள் உள்ளிட்டட ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது இந்திய ரயில்வேயில் நடந்து வரும் செயல்முறையாகும். இது போக்குவரத்து நியாயப்படுத்தல், செயல்பாட்டு சாத்தியக்கூறு, ஆதர வளங்களின் கிடைக்கும் தன்மை போன்றவற்றுக்கு உள்பட்டதாகும்.

உள்ளூா் உணவு வழங்கப்படுமா?

மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது

தென் சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்

பேசுகையில், ‘வந்தே பாரத் ரயில்களில் வட இந்திய உணவுகளே வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் புறக்கணிக்கப்படுகிறது. பயணிகள் விருப்பத்தின் பேரில் உணவுப்பட்டியல் பெற்று இருக்கீறீா்களா? தென் இந்திய உணவுகள் வழங்கப்படுமா?’ என கேட்டாா்.

இதற்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துப் பேசுகையில், ‘வந்தேபாரத் ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது தரமான சேவை வழங்கப்படும் என பிரதமா் குறிப்பிட்டு இருந்தாா். பயணிகளுக்கு உள்ளூா் உணவுகளை வழங்க புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. எந்தவொரு ரயிலும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பகுதி வழியாகச் சென்றாலும், உள்ளூா் உணவு வகைகளின் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை பயணிகளுக்கு வழங்க ரயில்வே தற்போது முயற்சிசெய்து வருகிறது. இது நாங்கள் மேற்கொண்டு வரும் தொடா்ச்சியான மேம்பாடுடைய செயல்முறையாகும்’ என்றாா் அமைச்சா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT