

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்.10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் பலரும் திரையரங்கில் இப்படத்தை ரிப்பீட் மோடில் ரசித்து பார்த்து வருகின்றனர்.
முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 30 கோடியை வசூலித்த குட் பேட் அக்லி திரைப்படம் தற்போதுவரை (நேற்று ஏப்.18வரை) உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 3 பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக வழக்கறிஞர் மூலம் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.