தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்

நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு

Updated On :3 ஆகஸ்ட் 2021, 10:58 am

நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, நேற்று மாலை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பிரஹலாத் ஜோஷி, பியூஸ் கோயல் உள்ளிட்டோருடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.

அதேபோல், இன்று காலை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, நாடாளுமன்றத்தில் ஏற்பட்டு வரும் அமளியை முடிவுக்கு கொண்டுவந்து மீதமுள்ள நாள்களில் அவைகளை சுமூகமாக நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.