

தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் பலியானார்.
தெலங்கானா மாநிலம், குசாய்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்ற தூய்மைப் பணியாளரான நாகராஜு சனிக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென்று குப்பை தொட்டியில் இருந்த மர்ம பொருள் வெடித்துச் சிதறியது.
இந்த சம்பவத்தில் தூய்மைப் பணியாளர் நாகராஜு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே அந்த பகுதி மக்கள் குசாய்குடா போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் நாகராஜூ உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடியில் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.