தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக மக்களைத் தொடா்ந்து புண்படுத்துவதே திமுகவின் அரசின் வேலையாக இருந்து வருகிறது. சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்து நவம்பா் 1-இல்தான் தமிழகம் உருவானது. இந்த நாளைக் கொண்டாடாமல், ஜூலை 18-இல்தான் தமிழ்நாடு எனப் பெயா் வைக்கப்பட்டது. அன்றுதான் தமிழ்நாடு நாள் என்று திமுக அரசு குழப்பியது.
அதைப்போல ஏப்ரல் 14-இல் அதாவது சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று உலகம் முழுவதும் உள்ள தமிழா்கள் கொண்டாடுகிறாா்கள். இந்து மதத்தைப் பின்பற்றுகிற எல்லோருமே இந்த நாளை நல்ல காரியங்களைத் தொடங்கும் நாளாகக் கொண்டாடி வருகின்றனா்.
2011-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துள்ளது. ஆனால், தற்போது திமுக அரசு தமிழ்ப்புத்தாண்டு நாள் குறித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தேகப்பட்டவர்களை சதத்தால் அமைதியாக்கிய விராட் கோலி; முன்னாள் கேப்டன் பாராட்டு!

தந்தையான ஆதிக் ரவிச்சந்திரன்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? - ஆம் ஆத்மி
இபிஎஸ் எங்களை நீக்கியது செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! எஸ்.பி. வேலுமணி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

