பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் காயம்

திருநெல்வேலி நகரம் ஸ்ரீராம் நகர் லாலுகாபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஸ்ரீகாந்த் பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். 
பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் காயம்
Updated on
1 min read

திருநெல்வேலி நகரம் ஸ்ரீராம் நகர் லாலுகாபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஸ்ரீகாந்த் பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். 

திருநெல்வேலி நகரம் ஸ்ரீராம் நகர் லாலுகாபுரம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் ஸ்ரீகாந்த் (17). இவர் திருநெல்வேலி நகரத்தில் உள்ள சாப்ஃடர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு கணினி அறிவியல் படித்து வருகிறார். ஸ்ரீகாந்த் திங்கட்கிழமை பள்ளி முடிந்தவுடன் தனது ஊருக்கு செல்லும் அரசு பேருந்தில் பின்வாசல் படிக்கட்டில் தொங்கியபடி சென்று கொண்டிருந்தாராம். திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஆர்சில் இருந்து அணுகு சாலை வழியாக பேட்டை செல்லும் சாலையில் பேரன் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தாக கூறப்படுகிறது.

உடனடியாக அந்த மாணவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com