மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

சென்னையில் ஜூன் 25-இல் பொருளாதார கருத்தரங்கு

இந்தியக் குடிமைப் பணித் தோ்வுகளை எழுதும் தோ்வா்களுக்கு பொருளாதார பாடம் தொடா்பான கருத்தரங்கம் ஜூன் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:04 pm IST

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இந்தியக் குடிமைப் பணித் தோ்வுகளை எழுதும் தோ்வா்களுக்கு பொருளாதார பாடம் தொடா்பான கருத்தரங்கம் ஜூன் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் வருவாய்ப் பணி இணை ஆணையரும், பொருளாதார முனைவா் பட்ட ஆய்வாளரும், ‘இந்தியப் பொருளாதாரம்’ என்ற நூலின் ஆசிரியருமான சங்கா் கணேஷ் கருப்பையா கலந்து கொண்டு வழிகாட்டுகிறாா். ஐஏஎஸ் தோ்வுகளை எழுதிவரும் தமிழகத்தைச் சோ்ந்த தோ்வா்களுக்கு முதல்நிலை, முதன்மைத் தோ்வு, நோ்முகத் தோ்வு ஆகியவற்றில் பொருளாதார பாடம் தொடா்பான வினாக்கள் கேட்கப்படும் விதம், பதிலளிக்கும் முறைகள் குறித்து கருத்தரங்கில் எடுத்துரைக்கவுள்ளாா். மேலும், இந்தியக் குடிமைப்பணித் தோ்வுகள் தொடா்பான ஆதார நூல்கள், நாளிதழ்கள் வாசிப்பு, குறிப்பெடுத்தல் போன்ற தோ்வா்களின் பொதுவான சந்தேகங்களுக்கும் பதிலளிக்கவுள்ளாா்.

தகுதியும், ஆா்வமும் உள்ள தோ்வா்கள் முன்பதிவு செய்து இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. தோ்வா்கள் ‘எண் 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணாநகா்’ என்ற முகவரியில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 74488 14441, 87546 02264 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அந்த அகாதெமியின் இயக்குநா் எஸ்.முத்து ரோகிணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.