

பூம்புகார்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
சீர்காழி, திருவெண்காடு மற்றும் பூம்புகார் பகுதியில் அதிகாலை முதலே மாட்டுப் பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள், காலையிலேயே தங்கள் வீட்டு மாடுகளை குளிப்பாட்டி, மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களை பூசி, மலர் மாலை அணிவித்து பொங்கலிட்டு படையல் செய்தனர்.
தொடர்ந்து மாடுகளை அருகிலுள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.