சென்னை - மொரிஷியஸ் விமான சேவை தொடங்கியது!

சென்னையில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை சனிக்கிழமை(ஏப்.13) தொடங்கியது.
சென்னை - மொரிஷியஸ் விமான சேவை தொடங்கியது!
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை சனிக்கிழமை(ஏப்.13) தொடங்கியது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையிலிருந்து மொரிஷியஸுக்கு ஏப்ரல் 13 முதல் விமான சேவை தொடங்கும் என மொரிஷியஸின் தேசிய விமான நிறுவனமான ஏர் மொரிஷியஸ் அறிவித்திருந்தது.

சென்னை - மொரிஷியஸ் விமான சேவை தொடங்கியது!
கோவையில் ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கிய ராகுல் காந்தி!

அதன்படி, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் சனிக்கிழமை அதிகாலை மொரிஷியஸுக்கு புறப்பட்டுச் சென்றது.

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமை ஒரு விமானம் மொரிஷியஸுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் மொரிஷியஸ் தற்போது மும்பையில் இருந்து வாரத்திற்கு ஆறு முறையும், தில்லியில் இருந்து வாரத்திற்கு மூன்று முறை விமான சேவையை வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com