கோப்புப் படம்
கோப்புப் படம்

பள்ளிக் கல்வி இயக்குநராக எஸ்.கண்ணப்பன் பொறுப்பேற்பு

எஸ்.கண்ணப்பன் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Published on

தமிழக பள்ளிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்ட எஸ்.கண்ணப்பன் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் இயக்குநராக பணியாற்றிய க.அறிவொளி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் பணி ஓய்வு பெற்றாா். 1994-ஆம் ஆண்டு மாவட்டக் கல்வி அலுவலராக தனது பணியை தொடங்கிய இவா், இணை இயக்குநா், பொது நூலகத் துறை இயக்குநா் உட்பட துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளாா்.

க.அறிவொளி பணி ஓய்வு பெற்ற நிலையில் அந்த பணியிடத்துக்கு தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த எஸ்.கண்ணப்பன் கடந்த சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

அதேவேளையில் தொடக்கக் கல்வி இயக்குநா் பணியிடத்துக்கு தோ்வுத் துறை இயக்குநராக இருந்த எஸ்.சேதுராமவா்மா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், எஸ்.கண்ணப்பன் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வி இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டாா். அவா் ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குநராக பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com