

சென்னை: 5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, பேரவை செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும், கேள்வி நேரமும், அதைத் தொடா்ந்து நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகளும் விவாதிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று(ஏப். 15) மாநில சுயாட்சி விவகாரம் குறித்து தீர்மானம் முன்மொழியப்பட உள்ளதாக பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் மு. க. ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முன்மொழிய உள்ளார்.
மேலும், ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மாநில சுயாட்சி தொடர்பான அறிவிப்புகளை அவர் வெளியிட உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.