10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் 100 மி.மீ. மழை!

சென்னையில் பெய்த கனமழை தொடர்பாக...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 100 மி.மீ. மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்தது.

சிறுது நேரம் பெய்தாலும் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 100 மி.மீ. பெய்துள்ளது. தற்போது மழைமேகக் கூட்டங்கள் சிறுசேரி, கேளம்பாக்கம், மகாபலிபுரம், பொன்மார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மற்றும் ஈசிஆர் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி 100 மி.மீ. மழை பெய்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து இன்று(ஏப். 16) பெய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com