

நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் இண்டிகோ விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது.
165 பயணிகளுடன் அசாம் மாநிலம், குவகாத்திக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அந்த விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.