உடனுக்குடன்

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!
சென்னை புறநகர், மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!
தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..!
குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு
கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!
சென்னை புறநகர், மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!
தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..!
குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5,330 கோடியில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள்!

ரூ. 5,330 கோடியில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக தமிழக அரசு தகவல்..
சென்னை வியாசா்பாடி டி.டி.பிளாக் பகுதியில் ரூ. 63.80 கோடியில் கட்டப்பட்டுள்ள 468 குடியிருப்புகள்
சென்னை வியாசா்பாடி டி.டி.பிளாக் பகுதியில் ரூ. 63.80 கோடியில் கட்டப்பட்டுள்ள 468 குடியிருப்புகள்கோப்புப் படம்
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் ஏழை, எளிய, குடிசைவாழ் மக்களுக்கு ரூ. 5,330 கோடியில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் வீடற்ற ஏழை, எளிய, குடிசைவாழ் மக்களுக்காக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னையில் 16,888 அடுக்குமாடி குடியிருப்புகளும், தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் 30,041 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் 134 திட்டப் பகுதிகளில் ரூ. 5,330 கோடி செலவில் 46,929 அடுக்குமாடி குடியிருப்புகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com