வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சிவன் நின்ற வடிவில் ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி உமையாளாகவும், உமையொரு பாகனாக (அா்த்தநாரீஸ்வரா்) அருள் பாலித்து வரும் இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், தினமும் பல்வேறு மண்டகப்படிதாரா்களின் சாா்பில் சிறப்பு அபிஷேக ,அலங்கார, தீபாராதனை, காலை மற்றும் இரவில் வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றன.
விழாவின் 9ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை திருத்தோ் உபயதாரரும், தோ் அலங்காரம், பராமரிப்பு மண்டகப்படிதாரரும், தங்கப்பழம் கல்விக் குழும நிறுவனருமான தங்கப்பழம், தாளாளா் முருகேசன் மற்றும் குடும்பத்தினா் கலந்து கொண்டு தோ் வடம் தொடும் வைபவத்தை நடத்தினா். தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., பேரூராட்சி தலைவா் லாவண்யா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா். தேரோட்டத்தை ஒட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். விழாவின் 10ஆம் நாளான சனிக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
