சூலூர் அருகே இரட்டைக் கொலை: 8 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்

சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் விசைத்தறி உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Updated on
1 min read


சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் விசைத்தறி உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருமத்தம்பட்டியில் விசைத்தறி உரிமையாளர் குமாரசாமி(63). அவரது மனைவி சுந்தராம்மாள்(50). இவர்கள் இருவரையும் கொலை செய்துவிட்டுத் தப்பிய கொலை குற்றாவாளியை கருமத்தம்பட்டி போலீசார் தேடி வந்தனர்.

தீவிர விசாரணைக்கு பின்பு கொலை குற்றவாளி ஈரோடு மாவட்டம், லக்காபுரம், வாய்க்கால் மேட்டைச் சேர்ந்த வீரப்பன் மகன் பெருமாள்(43) என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 8 மணி நேரத்தில் கொலைகுற்றவாளியை கைது செய்து, அவரிடம் இருந்த நகை மற்றும் சொல்போனை பறிமுதல் செய்தனர்.

விசைத்தறி உரிமையாளர் தன்னை திட்டியதால் அவரை கொலை செய்ததாகவும், அப்போது அங்கிருந்த அவரது மனைவியையும் கொன்றதாகவும் பெருமாள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com