இலையுதிர்காலம்

அமெரிக்காவில் வடக்கு மற்றும் பல பகுதிகளில் இலையுதிர் காலம் துவங்கிவிட்டது. இதனை இங்கு ஃபல் என்று அழைக்கின்றனர்.
இலையுதிர்காலம்
Updated on
1 min read

அமெரிக்காவில் வடக்கு மற்றும் பல பகுதிகளில் இலையுதிர் காலம் துவங்கிவிட்டது. இதனை இங்கு ஃபல் என்று அழைக்கின்றனர். செப்டம்பர் மாத இறுதியில் மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் சிகப்பு நிறமாக மாறிவிடும். வேகமாக காற்று வீசும் பொழுது இலைகள் கீழே விழுந்துவிடும். சாலையில் செல்லும் பொழுது மரங்களின் மஞ்சள் சிகப்பு நிறம் கண்ணைக் கவருகிறது. இதற்கு பின்னர் வருகிற பனி காலத்திற்கு முன்பு மரங்களில் உள்ள இலைகள் வண்ணம் மாறி கீழே விழுந்துவிடும்.

இயற்கை தானே ஏற்படுத்திக் கொண்ட மாற்றத்தை இங்கே காண்கிறோம். பனிகாலம் துவங்குவதால், இலையுதிர் காலத்தில் பறவைகள் வெப்பமான இடத்திற்கு சென்றுவிடும். மற்ற விலங்குகள் பனி காலத்திற்கு வேண்டிய உணவினை சேகரித்து வைக்கும். ஃபல் எனப்படும் இலையுதிர் காலத்தில் இயற்கை வண்ணமயமாகக் காட்சி தருவது கவரும் விதத்தில் அமைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com