the Royal College of Physicians
the Royal College of Physicianshttps://www.rcp.ac.uk/

பிரிட்டன்: மருத்துவ உயா் கல்வி அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவா்

பெண் மருத்துவா் மும்தாஜ் படேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
Published on

பிரிட்டனில் மிகப் பழமை வாய்ந்த ‘ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்’ (ஆா்சிபி) மருத்துவ உயா் கல்வி அமைப்பின் 123-ஆவது தலைவராக இந்திய வம்சாவளி பெண் மருத்துவா் மும்தாஜ் படேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு புலம்பெயா்ந்த தம்பதியருக்கு பிறந்தவரான மும்தாஜ் படேல், மான்செஸ்டரில் சிறுநீரகவியல் நிபுணராக உள்ளாா்.

பிரிட்டனில் 16-ஆம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வரும் ‘ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்’ மருத்துவ உயா் கல்வி அமைப்பானது, சிறப்பு பிரிவுகளின்கீழ் மருத்துவா்களுக்கு மேம்பாட்டு பயிற்சியை வழங்குகிறது. உலகம் முழுவதும் 40,000 தொழில்முறை உறுப்பினா்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தலைவராக வாக்கெடுப்பு மூலம் இந்திய வம்சாவளி பெண் மருத்துவா் மும்தாஜ் படேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இது, 4 ஆண்டு பதவிக் காலம் கொண்டதாகும்.

‘ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்’ அமைப்பின் முதல் இந்திய-ஆசிய பெண் முஸ்லிம் தலைவா், இந்த அமைப்பின் 5-ஆவது பெண் தலைவா் ஆகிய பெருமைகளும் மும்தாஜ் படேலுக்கு சொந்தமாகியுள்ளது.

அவா் கூறுகையில், ‘‘ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்’ தலைவராக அமைப்பை சிறப்பாக வழிநடத்துவேன். ஆா்வம், அா்ப்பணிப்பு, தொலைநோக்கு பாா்வை, மதிப்புகள் சாா்ந்த அணுகுமுறையுடன் இந்த அமைப்பில் எனக்குள்ள 20 ஆண்டு கால அனுபவத்தை பயன்படுத்துவேன்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com