தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

'இது என்ன பரம்பரையாக இருக்கும் ? முரட்டுத்தனமான பயிற்சி' - பிரபல நடிகை பகிர்ந்த விடியோ

டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியாளரை உற்சாகப்படுத்த பயிற்சியாளர் அவரது கண்ணத்தில் அறைவிடும் விடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:17 am IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியாளரை உற்சாகப்படுத்த பயிற்சியாளர் அவரது கண்ணத்தில் அறைவிடும் விடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

'சார்பட்டா பரம்பரை' படம் அமேசான் பிரைமில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் 1970களின் பிற்பகுதியில் சென்னையில் குத்துச்சண்டை விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. 

வழி வழியாக குத்துச்சண்டை விளையாட்டைத் தொடருபவர்களைப் பரம்பரை அழைப்பார்கள். இந்தப் படத்தில் சார்ப்பட்டா பரம்பரையைச் சேர்ந்தவராக வரும் ஆர்யா குத்துச்சண்டைப் போட்டியில் வென்று எப்படித் தன் பரம்பரைக் கௌரவத்தை நிலைநாட்டுகிறார் என்பதே படத்தின் கதை. 

இந்தப் படத்தில் ஆர்யாவுக்கும் அவரது பயிற்சியாளரான பசுபதிக்குமான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா தனது சுட்டுரைப் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள செல்லும் போட்டியாளரை உற்சாகப்படுத்தும் விதமாக அவரது கன்னத்தில் அறை விடுகிறார். இந்த விடியோவிற்கு முரட்டுத்தனமான பரம்பரையாக இருக்கும் போலேயே என நடிகை ஷர்மிளா கருத்து தெரிவித்துள்ளார். இந்த விடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.