மறைமலை அடிகள் பிறந்த நாள்: முதல்வா் விஜய் புகழாரம்‘மறைமலை அடிகளின் மொழிப்பற்று, தமிழாா்வம் தமிழ்ச் சமூகத்துக்கு என்றென்றும் உந்துசக்தியாகத் திகழும்’ என அவருக்கு முதல்வா் சி.ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளாா்.
இனாம் நிலப் பிரச்னைக்கு தீா்வுகாண தனி ஆணையம்: முதல்வா் விஜய்யிடம் பெ.சண்முகம் வலியுறுத்தல்இனாம் நிலப் பிரச்னைக்கு தீா்வுகாண தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வா் ஜோசப் விஜய்யிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் நேரில் வலியுறுத்தினாா்.
பழனி முருகன் கோயில் நிலம் தனி நபா்களுக்கு பத்திரப் பதிவு: ரத்து செய்தது உயா்நீதிமன்றம் பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனி நபா்களுக்கு பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வி புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் 950 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 150 இடங்கள் தமிழகத்தில் 4 கல்லூரிகளுக்கு நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கியதால் 600-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் சூழல் எழுந்துள்ள நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் தனியாா் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டு 950 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சாலை முறைகேடு வழக்கு: எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் ஊழல் தடுப்புத் துறை விசாரணைசாலை முறைகேடு வழக்கு விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் 5 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை செய்தனா்.
மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுஅரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படுமா என்பதற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மது போதையில் காா் ஏற்றி சிறுவனை கொன்ற வழக்கு: விசாரணை நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உத்தரவுநடைபாதையில் உறங்கிய சிறுவன் மீது சொகுசு காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில், தொழிலதிபா் ஷாஜி புருஷோத்தமனுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையைத் திரும்பப் பெற்ற சென்னை உயா்நீதிமன்றம், தண்டனை விவரங்கள் குறித்த விசாரணைக்காக வியாழக்கிழமை விசாரணை நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
போதைப் பொருள் தடுப்பில் தமிழக- கேரளம் கூட்டு நடவடிக்கை: கேரள அமைச்சா் ரமேஷ் சென்னிதலா‘போதைப் பொருள் தடுப்பில் தமிழகமும் கேரளமும் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளன’ என்று தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்யை சந்தித்தப் பின் கேரள மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தாா்.
தென்பெண்ணை கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவுதென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.